நேற்று 655 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பு கம்பஹாவில் மட்டும் 519 பேர் அடையாளம்!
In இலங்கை December 14, 2020 3:51 am GMT 0 Comments 1516 by : Jeyachandran Vithushan

இலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 655 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 75 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 41 பேர் அம்பாறையைச் சேர்ந்தவர்கள் என்றும் குருநாகலில் 22 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இரத்தினபுரியில் 05 பேருக்கும் புத்தளத்தில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 23 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 845 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 152 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.