நோட்ரே டாம் தீவிபத்து குறித்து விசாரணை : அரசாங்கம் உறுதி
பரிஸ் நோட்ரே டாம் (Notre Dame) தேவாலயத்தில் தீ பரவியமை குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த தீ விபத்து புனரமைப்பு பணிகளின் போது ஏற்பட்டதா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், தீ பரவலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சுமார், 850 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கட்டிடத்தின் கூரைப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை தீ பரவியது. ஆலயத்தின் ஒரு பகுதியில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்தபோதே இந்த தீ ஏற்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள பிரதான சொரூபங்கள் அகற்றப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எவ்வாறாயினும், தேவாலயத்தின் இரண்டு மணிக்கோபுரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 8 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஆலயத்தில் தீ நீடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் தற்போது தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ள அதேவேளை, தற்போது தீ பரவிய பகுதியில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்