நோயாளருக்கு கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்டது மன்னார் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றற அச்ச நிலை அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.