பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஓஃப்க்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரின் 52ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 12 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மொஹாலி நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
தீர்க்கமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சேம் கர்ரன் 55 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரான் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சந்தீப் வாரியார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைதொடர்ந்து, 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 18 ஓவர்கள் நிறைவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள மறுபுறம் தோல்வியடைந்த பஞ்சாப் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சுப்மான் கில் 65 ஓட்டங்களையும், கிறிஸ் லின் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்து வீச்சில் மொஹட் ஷமி, அஸ்வின் மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா அணியின் இளம் வீரர் சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.