பரகுவேயில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பரகுவேயில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பரகுவேயில், ஒரு இலட்சத்து 612பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 74ஆவது நாடாக விளங்கும் பரகுவேயில், இதுவரை கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்து 103பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 823பேர் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25ஆயிரத்து 788பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 181பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை 72ஆயிரத்து 721பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.