பரிசோதனைக்காக கொங்ஹொங்கின் ஒருபகுதி முழுமையாக முடக்கம்!
In உலகம் January 27, 2021 7:54 am GMT 0 Comments 1320 by : Jeyachandran Vithushan

பரிசோதனைகளை நடத்துவதற்காக கொங்ஹொங்கின் யாவ் மா டேய் என்ற பகுதி நேற்று முதல் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த பகுதியில் உள்ள சில கட்டடங்களில் வசிப்போர், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் வரை வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் முடக்கநிலை செயல்படுத்தப்பட்ட யாவ் சிம் மொங் வட்டாரத்தின் ஒரு பகுதியே யாவ் மா டேய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் இதுபோன்ற முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.