பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ
In ஆசிரியர் தெரிவு April 15, 2019 7:47 pm GMT 0 Comments 2842 by : Varshini
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டம் கட்டமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
12ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடம் வரலாற்று பொக்கிஷமாக காணப்பட்டது. வருடந்தோறும் மில்லியன் கணக்காக பார்வையாளர்கள் இங்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையை ரத்துசெய்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தீ ஏற்பட்ட பகுதிக்கு பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பே
-
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம்
-
கொரோனா தொற்றினால் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் பயணிகளை 10 நாட்கள் கட்டாய தனிம
-
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடையாது என தமிழக பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் தெரிவித
-
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜ
-
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவ
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (திங்கட்கிழமை) மு
-
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்