பலஸ்தீன தேசத்தின் அமைதி, வளம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜெய்சங்கர்
In இந்தியா November 16, 2020 5:21 am GMT 0 Comments 1391 by : Krushnamoorthy Dushanthini

பலஸ்தீன தேசத்தின் அமைதி, வளம் ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன தேசத்தின் சுதந்திர தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் ‘பாலஸ்தீன சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு அரசு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ரியாத்-அல்-மாலிகி மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துகள். அந்நாட்டின் அமைதி வளம் ஆகியவற்றுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனம் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னா் அதனை தனி நாடாக இந்தியா உள்பட சில நாடுகள் முதலில் அங்கீகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.