பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் இரண்டு இலட்சத்து 252பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 52ஆவது நாடாக விளங்கும் பல்கேரியாவில் இரண்டு இலட்சத்து 36ஆயிரத்து 666பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக ஒன்பதாயிரத்து 854பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 227பேர் பாதிக்கப்பட்டதோடு 15பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 26ஆயிரத்து 560பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 321பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.