பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 58ஆவது நாடாக விளங்கும் பல்கேரியாவில் இதுவரை மொத்தமாக இரண்டாயிரத்து 282பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 519பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 152பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 69ஆயிரத்து 171பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 288பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 30ஆயிரத்து 317பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.