பாடசாலை அருகே குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு!
யேமனினுள்ள பெண்கள் பாடசாலை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பில் 110 பேர் வரை காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் சனாவின் அருகிலுள்ள கிடங்கிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. இதில் பெண்கள் பாடசாலையொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து தலைநகர் சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வசமுள்ளது. இதனால் அப்பகுதி அரச படைகளால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
யேமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற போதும், இக்குண்டுவெடிப்புக்கு இன்னும் உரிமைகோரவில்லை.
இதேவேளை, கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை தேக்கிவைத்த கிடங்கிலிருந்தே மேற்படி குண்டு வெடித்ததாக யேமன் அரச செய்திச் சேவையொன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்