பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருக்கு கொரோனா உறுதி
In இலங்கை January 11, 2021 4:24 am GMT 0 Comments 1344 by : Dhackshala

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அவர் இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சி.சி.டி.வி. காணொளிக் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவருடன் தொடர்புகளை பேணிய நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் வழக்கம் போல கடமைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.