பிரதமர் மஹிந்த பதவி விலகுகிறார் என வெளியான செய்தி குறித்து யோசித விளக்கம்
In இலங்கை February 10, 2021 9:25 am GMT 0 Comments 1725 by : Dhackshala

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார் என சமூக ஊடகங்களில் நேற்று மாலை முதல் வெளியான செய்திகளில் எந்த உண்மையுமில்லை என யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இது பொய்யான தகவல் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியிலிருந்து விலகுவார் என நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பதை போன்ற குரல் பதிவு நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
எனினும் இது 2018ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது வெளியான குரல் பதிவு மீண்டும் வெளியாகியுள்ளது என யோசித ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.