பிரதமர் மேயின் கோரிக்கை தொடர்பாக ஆராய பிரித்தானிய நாடாளுமன்றம் அனுமதி
In இங்கிலாந்து April 9, 2019 5:01 am GMT 0 Comments 2402 by : adminsrilanka
உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிவரை தாமதப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் பிரதமர் மேயின் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து பார்ப்பதற்கான சட்டமூலத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரதமர் மே ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் உறுப்புரிமையை நீடிப்பது தொடர்பாக பிரசல்ஸ்ஸிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
பல்வேறு மாற்றுத் திட்டங்களைத் தேடும் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சியான தொழிற்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அவகாசம்பெறும் நோக்கில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
பிரித்தானிய நாடாளுமன்றம் தனது பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மூன்று முறை நிராகரித்த பின்னர், கடைசி முயற்சியாக நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை பிரதமர் மே மேற்கொண்டுள்ளார்.
ஆனால் ஏப்ரல் 12 ஆம் திகதி நிகழும் ஒரு உடன்பாடற்ற வெளியேறும் சட்டத்திற்கு எதிராக மேலதிக சட்டபூர்வ உத்தரவாதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாகவே பெறுவதற்கு விரும்புகின்றனர்.
பிரதமர் மே பிரசல்ஸூக்கு செல்வதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்வதற்கான அனுமதியை இந்த சட்டமூலம் வழங்குகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்