பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொவிட்1-9 அறிகுறிகள் இல்லை!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகள் இல்லை என எலிசி அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக எலிசி அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்துவிட்டது. அவருக்கு எந்தவிதமான கொரோனா தொற்றும், அதற்கான அறிகுறிகளும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கடந்த 17ஆம் திகதி வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா அறிகுறிகளான இருமல், உடல் வலி ஆகியவை இருந்ததையடுத்து, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முதல் மக்ரோன் ஆரோக்கியமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.