பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
In இங்கிலாந்து December 21, 2020 5:15 am GMT 0 Comments 1619 by : Anojkiyan

பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 35ஆயிரத்து 928பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 326பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
முன்னதாக கடந்த 17ஆம் திகதி 35ஆயிரத்து 383பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதே நாளொன்றுக்கான அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 20 இலட்சத்து 40ஆயிரத்து 147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 67ஆயிரத்து 401பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 364பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.