பிரித்தானியாவில் நேற்று மட்டும் 18,262 பேருக்கு கொரோனா தொற்று !
In இங்கிலாந்து February 7, 2021 3:52 am GMT 0 Comments 1783 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து 262 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 828 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அங்கு இதுவரை பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 39 இலட்சத்து 29 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.
அத்தோடு பிரித்தானியாவில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவாகிய தொற்று எண்ணிக்கையை விட இரண்டாவது அலையில் தொற்று விகிதம் மிக அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இதேவேளை பிரித்தானியாவில் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.