பிரெக்ஸிற் தாமதத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது: பார்னியர்
In இங்கிலாந்து April 9, 2019 1:42 pm GMT 0 Comments 3161 by : shiyani

பிரித்தானிய அரசியல் கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகளின் மூலமாக பிரெக்ஸிற் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடியுமென்ற நம்பிக்கையில் மேலதிக நீடிப்பை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதாக ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் மாநாடொன்றில் பேசிய பார்னியர் கூறியதாவது;
பிரெக்ஸிற்றை மேலதிகமாக எவ்வளவு காலத்துக்கு பிற்போடுவது என்பது பிரித்தானியாவால் முன்வைக்கப்படும் காரணத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
எந்தவொரு நீடிப்புக்கும் ஒருநோக்கம் அவசியம். நீடிப்பின் காலம் குறிக்கோளுக்கு ஏற்றதாக அமையவேண்டும். எமது நோக்கம் உடன்படிக்கையுடன் கூடிய பிரெக்ஸிற்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் நிகழ்வதற்கு ஒருநாளும் ஐரோப்பிய ஒன்றியம் காரணமாக அமையாது. உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்படவேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபடியும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது என பார்னியர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு