பீகாரில் பெண்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு
In இந்தியா February 3, 2021 1:09 pm GMT 0 Comments 1344 by : Jeyachandran Vithushan

பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி பிளஸ் 2 முடித்த திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கான கல்வி உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பீகாரில் ஒரு கோடியே 60 இலட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.