பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு!

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ள 1.7 மில்லியன் பேருக்கான தடுப்பூசிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை 500.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இதனிடையே தற்போது நாள் ஒன்றுக்கு 100.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படு வருவதாக பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.