பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றினால் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 106பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் மொத்தமாக ஐந்து இலட்சத்து 25ஆயிரத்து 12பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 78ஆயிரத்து 873பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 457பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 32ஆயிரத்து 33பேர் பூரணமாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.