பொக்ஸிங் டே: ஒரே நாளில் மூன்று டெஸ்ட் போட்டிகள்!

சிறப்பு மிக்க பொக்ஸிங் டே (டிசம்பர் 26ஆம் திகதி) அன்று மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முதல் போட்டியில் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்சுரியன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும் தென்னாபிரிக்கா அணிக்கு குயிண்டன் டி கொக்கும் தலைமை தாங்கவுள்ளனர்.
அடுத்ததாக இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன.
மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு அஜிங்கியா ரஹானேவும் அவுஸ்ரேலியா அணிக்கு டிம் பெய்னும் தலைமை தாங்கவுள்ளனர்.
மற்றொரு போட்டியில், நியூஸிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மவுண்ட் மவுன்காய் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும், பாகிஸ்தான் அணிக்கு மொஹமட் ரிஸ்வானும் தலைமை தாங்குகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.