பொது சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்!
In இலங்கை December 4, 2020 7:32 am GMT 0 Comments 1525 by : Jeyachandran Vithushan

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட கொரோனா தொற்று நோயாளியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில், இன்று காலை குறித்த சந்தேக நபரை கைது செய்த பண்டாரகம பொலிஸார், காணொளி தொழிநுட்பம் ஊடாக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதனை அடுத்து, குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவா உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த சந்தேக நபரை சுகாதார நடைமுறையின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.