பொத்துவில் முதல் பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணியில் அணிதிரள யாழில் விழிப்புணர்வு!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியாய் திரள விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
மருதனார்மடம் சந்தையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கை யாழ். குடாநாட்டின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்டோர் இந்த விழிப்பூட்டல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கடந்த மூன்றாம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகியதுடன் நான்காம் நாள் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டம் மக்களின் பேரெழுச்சியுடன் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.