பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்!
பிரான்சில் தொடர்ச்சியாக 22ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யெலோ வெட்ஸ் அமைப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், யெலோ வெஸ்ட் அமைப்பினரின் போராட்டமானது, நேற்று(சனிக்கிழமை) 22ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பொலிஸாருக்கும், ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தடியடி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
பிரான்சில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறும் வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத