போக்ஸ்- டொம் கர்ரனின் நிதான துடுப்பாட்டத்தின் துணையுடன் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 45 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி, 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக போல் ஸ்டைர்லிங் 33 ஓட்டங்களையும், மார்க் ரிச்சட் அடாய்ர் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, 199 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்ப விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து கடும் நெருக்கடிக்குள்ளானது.
ஆனால், பென் போக்ஸ் மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் களத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கமைய இங்கிலாந்து அணி, 42 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.
இதன்போது, இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக பென் போக்ஸ் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும், டொம் கர்ரன் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக வெற்றிக்கு துணைநின்ற பென் போக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.