மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுகின்றன – சுரேஸ் குற்றச்சாட்டு
In ஆசிரியர் தெரிவு April 6, 2019 4:59 am GMT 0 Comments 2978 by : Dhackshala
மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வடக்கில் இருக்குமாக இருந்தால், தமிழர்களது காணிகளுக்கு பாரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கிற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தேவையற்ற ஒன்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் வயல் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்கள் வாழும் கொக்குலாய், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களையும் மகாவளி அமைச்சு அபகரிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு அதற்கு எதிராக தமிழ் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் மகாவளி அபிவிருத்தி திட்டம் மோசமான எதையும் செய்யவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது, தமிழ் மக்களை ஏமாற்றும் செயலென்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி