மக்கள் நீதி மய்யத்துக்கு ரஜினி ஆதரவா? – கமல் விளக்கம்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவளிக்குமாறு ரஜினியிடம் கேட்டிருப்பதாகவும், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அவர் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எந்தவொரு பெரிய கட்சியின் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடுகின்றது. இந்த தேர்தலில் கமல் கட்சி பெறும் வாக்கு விகிதத்தை வைத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் கணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்கவும் என்றும் ரஜினிகாந்த் ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளார்.
மேலும் மற்ற கட்சித் தலைவர்களை விமர்சிக்கும்போது ரஜினியையும் அவ்வப்போது கமல்ஹாசன் மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
இவ்வாறிருக்க விமர்சனமும் செய்துவிட்டு அவரிடம் ஆதரவும் கேட்பது முரண்பாடாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.