மட்டக்களப்பு – மரப்பாலம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை December 21, 2020 4:05 am GMT 0 Comments 1503 by : Dhackshala
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரப்பாலம் குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அன்ரன்ராஜ் விதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞர், நேற்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.