மதரசா பாடசாலைகள் குறித்த அறிக்கை பிரதமரிடம் ஒப்படைப்பு
In ஆசிரியர் தெரிவு May 7, 2019 5:23 am GMT 0 Comments 2604 by : Risha

மதராசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பாக கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதரசா பாடசாலைகள் தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மதரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பான சட்டங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து இது குறித்து ஆராய்வதற்காக முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச.ஏ.அப்துல் ஹலீமினால் இக்குழு நியமிக்கப்பட்டது.
மதராசா பாடசாலைகளில் இஸ்லாமிய அடைப்படைவாதம் கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலேயே இது குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்
-
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆ
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட
-
பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்ப
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவ