மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சை கேட்கும் நிலை – ஸ்டாலின்
In இந்தியா April 5, 2019 4:36 pm GMT 0 Comments 2040 by : adminsrilanka
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிகளை மத்திய அரசாங்கம் உரிய வகையில் வழங்கத் தவறியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜி.எஸ்.டி வரி வசூலில் மாநிலத்தின் பங்கை பெறுவதற்கு மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சை எடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது? ஜி.எஸ்.டி வரி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்திருக்கின்றது.
அதேபோன்று, இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை என்று அறிவித்திருக்கிறார்கள், அதே போதுமானதல்ல. குறைந்தபட்சம் 12,000 ரூபாய் வழங்கிட வேண்டும். தற்போது அறிவித்திருக்கக்கூடிய சலுகைகளை ஏன் 2012ஆம் ஆண்டில் அறிவிக்கவில்லை?” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ