மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை – ஹன்னன் மொல்லா
In இந்தியா December 9, 2020 7:19 am GMT 0 Comments 1338 by : Krushnamoorthy Dushanthini

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஹன்னன் மொல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ அரசின் முன்மொழிவை பற்றி விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்துவார்கள்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை. டெல்லி மற்றும் ஹரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் பகல் 12 மணியளவில் விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான மூன்று அமைச்சர்கள் குழு இன்று (புதன்கிழமை) பேச்சுவாரத்தை நடத்தவுள்ளது.
விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து 13வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.