மருதனார்மடம் கொரோனா கொத்தணி 110 ஆக அதிகரிப்பு
In இலங்கை December 28, 2020 2:40 pm GMT 0 Comments 1653 by : Jeyachandran Vithushan
யாழிலும் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்றையதினம் 666 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இனுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிகை 110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.