மிக எளிமையாக நடைபெற்றது குறளரசனின் திருமணம்

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குறளரசனும் கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி அவரின் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.
இதையடுத்து மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். குறளரசன் நபீலாவின் திருமண வரவேற்பு வரும் 29ஆம் திகதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை சினிமா, அரசியல் பிரமுகர்களிடம் கொடுத்து வந்தார், டி.ராஜேந்தர். திருமணத்தை வீட்டிலேயே எளிமையாக முடித்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளனர்.
இதனிடையே, உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த