மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராட்டம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, மருத்துவ பணியாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியுள்ளனர்.
எதிர்ப்பை காட்ட சிவப்பு பட்டிகளை அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் இராணுவத்துக்கு வேலை பார்க்க மாட்டோம் என கோஷமிட்டனர்.
போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதால், மியன்மாரில் கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையில், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் நடத்தும் போராட்டத்தால் கொரோனா கட்டுப்பாடு மேலும் சீர்குலையும் என கூறப்படுகிறது.
இவர்களில் சிலர் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், பலர் சிவப்பு பட்டிகளை அணிந்து அரசாங்க மருத்துவமனைகளில் மட்டும் வேலைக்கு செல்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.