முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்து கலந்துரையாடல்
In இலங்கை April 17, 2019 3:13 am GMT 0 Comments 2254 by : Dhackshala

மாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்து மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு. பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் மற்றும் கிழக்கு மாகாண ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பவற்றை உயர்த்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல், போராளிகளின் பிள்ளைகளின் கல்வி நிலையினை மேம்படுத்தும் முகமான ஒத்துழைப்புகள், உதவிகளை நல்குதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக மாநகரசபையினூடாகவும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்பு ஊடாகவும் பல்வேறு செயற்திட்டம் தற்போதும் இடம்பெற்றுவருவதோடு தொடர்ந்து இச்செயற்திட்டத்தை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாநகர முதல்வர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.