முன்னாள் போராளிகளை இராணுவம் உள்ளீர்ப்பது மிகப்பெரும் ஆபத்து – மாவை எச்சரிக்கை
முன்னாள் போராளிகளை இராணுவத்தரப்பு உள்ளீர்ப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தரப்பினருக்கும் இடையே நேற்று யாழில் இடம்பெற்ற சந்திப்பை மேற்கோள் காட்டியே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அத்துடன் இராணுவம் வேண்டாம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது தற்போதைய நிலையில் இராணுவத்தின் பாதுகாப்பு தேவையும் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக சர்வதேச எமது பக்கத்தில் உள்ள நிலையில் தற்போதைய நிலைமை அதனை மழுங்கடித்துவிடாது எனவும் ஐ.நா.வின் ஆதரவை இழந்துவிடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்