முழுமையாக உடற்தகுதி அடைந்துள்ளேன் – மத்தியூஸ்

முழுமையாக தாம் உடற்தகுதி அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி முதல் 11ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அஞ்சலோ மத்தியூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தற்போது என்னுடைய உபாதை முழுமையாக குணமடைந்துள்ளது.
எனது பயிற்சிகள் அனைத்தையும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் மேற்கொண்டிருந்தேன். அதன் பின்னர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடினேன்.
ஆனால், இதுவரை பந்து வீசுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. தற்போதைக்கு பந்து வீசுவதற்கான எண்ணம் இல்லை. தேர்வுக் குழுவிடம் கலந்துரையாடி, முழுநேர துடுப்பாட்ட வீரராக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம