சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் – இலங்கையின் செய்கை ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா
In ஆசிரியர் தெரிவு February 18, 2021 6:14 am GMT 0 Comments 1393 by : Dhackshala
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை, அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் இன்று (வியாழக்கிழமை) தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் கொள்கையை முடிவிற்கு கொண்டுவருவதிலிருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து அவர்களின் உரிமைகளுக்கான மேலும் கௌரவம் வழங்கப்படவேண்டும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
Disappointed to see that the Government and PM are backing away from ending discriminatory cremation policy. People, including loved ones recently passed, deserve more respect for their rights from a democratic government.
— Ambassador Teplitz (@USAmbSLM) February 18, 2021
சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.
பிரதமரின் அறிவிப்பை அலெய்னா ரெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பின்னர், அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சின் நிபுணர் குழு முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த விவகாரத்தில் பிரதமர் தனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே தெரிவித்திருந்தார் என அமைச்சர் உதய கம்மன்பில நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.