முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேற வேண்டும் – விஜயகலா
In இலங்கை April 7, 2019 10:04 am GMT 0 Comments 2399 by : Dhackshala
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.
மன்னாரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பேருவலை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ், மன்னார் மாவட்டங்களில் மீள் குடியேற வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கான வளங்களை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
மேலும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, கல்வி வளர்ச்சிக்காக அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அந்த நிதியினூடாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்