மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் தாமதம் – ஜி.எல்.பீரிஸ்
In இலங்கை December 31, 2020 3:39 am GMT 0 Comments 1469 by : Dhackshala

எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையினை செயற்படுத்துவது தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.