மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவர் கைது
In இலங்கை April 29, 2019 6:05 am GMT 0 Comments 2628 by : Yuganthini
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், குறித்த சந்தேகநபரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.
இலங்கையில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை மொஹமட் சஹ்ரானுக்கு சந்தேகநபரான மதகுரு வழங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபரான மதகுருவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குண்டுத் தாக்குதலின் முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் சஹ்ரான் வசித்த, மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள வீட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று சோதனையிட்டனர்.
ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சாய்ந்தமருது பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட இருவரும் மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா