மோடி இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார் – ராகுல் கடும் விமர்சனம்

பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்கிறார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் தெரிவிக்கையில், “பிரதமர் மோடி, நிரவ் மோடி, அனில் அம்பானி போன்ற தன்னுடைய நண்பர்களுக்காக ஒரு இந்தியாவையும் ஏழை விவசாயிகளுக்காக ஒரு இந்தியாவையும் உருவாக்க மோடி முயற்சி செய்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் ரஃபேல் ஊழல் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும். பிரதமர் மோடி மற்றும் குற்றஞ்செய்த பிறர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஏழைகளுக்கு வருடம் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் நியாய் திட்டத்திற்கான பணம் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றோரின் பையில் இருந்து எடுக்கப்படும்.
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்ற திருடர்களுக்காக நான் பயப்படவில்லை. பிரதமர் மோடி வேண்டுமென்றால் பயப்படலாம்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்