யாழில் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு
தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான போட்டியில் வெற்றியீட்டிய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ். ஊடக அமையமும் இணைந்து நடத்திய இந்த போட்டியின் இன்றைய விருது வழங்கும் நிகழ்வில் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ். ஊடக அமையமும் இணைந்து தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் வட. மாகாணத்தில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியை நடத்தியது.
இந்த பயிற்சியின் அடுத்த கட்டமாக பயிற்சியில் கலந்துகொண்ட 30 ஊடகவியலாளர்களுக்கிடையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பிரயோகித்து செய்திகள், ஆக்கங்களை எழுதும் போட்டி ஒன்றினையும் நடத்தியது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர்களுக்கே இன்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கு.செல்வகுமார், அ.யசீகரன், எஸ்.குமணன் ஆகிய 3 ஊடகவியலாளர்கள் விருதுகளைப் பெற்றனர். இந்நிகழ்வில் வட. மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத