யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது
In இலங்கை April 1, 2019 7:09 am GMT 0 Comments 3326 by : Dhackshala

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 கிலோ 300 கிராம் கஞ்சா போதைபொருட்கள் மீட்கப்பட்டுளளன.
அதேவேளை அச்சுவேலியைச் சேர்ந்த நபர் ஒருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 385 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் மல்லாகம் புகையிரத நிலையத்தில் ஹெரொயின் போதைப்பொருளுடன் இருவரை காங்கேசன்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 400 மில்லிகிராம் ஹெரொயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொ
-
டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட