யாழில் நிலவும் மழையுடனான காலநிலை – 8 குடும்பங்கள் பாதிப்பு
In இலங்கை January 12, 2021 3:35 am GMT 0 Comments 1386 by : Dhackshala

யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தெல்லிப்பளை, மருதங்கேணி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.