யாழில் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
In இலங்கை May 1, 2019 8:46 am GMT 0 Comments 2430 by : Dhackshala

யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின்போது மசூதிகளை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜும்மா மசூதி நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.
தமது மசூதியில் தேடுதல் நடத்த வந்தபோது, அதிகாரிகள் மசூதிக்குள் பாதணிகளுடன் புகுந்தனர் என்றும் தான் பாதணிகளை கழற்றிவிட்டு வருமாறு அவர்களிடம் கோரியபோதும் அவர்கள் அதனை கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்களுடன் பார்க்கின்றனர். அதனால் அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதுடன், அவமதிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் சாதாரண முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பயங்கரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் ஆனால் சாதாரண முஸ்லிம் மக்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் போக்கு தமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது என்றும் ஐந்து சந்தி மொஹைதீன் ஜும்மா மசூதி நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்