யாழில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் அதிரடியாக கைது!
In இலங்கை May 5, 2019 4:53 pm GMT 0 Comments 2810 by : Jeyachandran Vithushan

யாழ்.மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
மானிப்பாயில் ஏப்ரல் 10ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.
அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அத்தோடு சந்தேகநபர் வாளுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டானதுடன் மற்றொரு இளைஞரும் காயமடைந்தார். அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் வாளுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக
-
முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு
-
தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்
-
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர