யாழ்.பல்கலை மாணவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – சரத் பொன்சேகா
In இலங்கை May 5, 2019 2:35 pm GMT 0 Comments 5023 by : Jeyachandran Vithushan

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், அவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல அரசியல் தலைவர்களும் மாணவர்கள் விடுதலை குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது உடனடியாக பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முடியாது. அவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும்.
நல்லாட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இது கடந்த ஆட்சியில் மறைமுகமாக இடம்பெற்றன. இந்த ஆட்சியில் வெளிப்படையாக இடம்பெறுகின்றன. இதுதான் உண்மை” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்