ரொறன்ரோவில் முதலாவது கஞ்சா போதைப் பொருள் விற்பனை நிலையம்
In கனடா April 3, 2019 3:12 pm GMT 0 Comments 2631 by : Jeyachandran Vithushan

ரொறன்ரோவில் முதலாவது கஞ்சா போதைப் பொருள் விற்பனை நிலையம் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பல்கலைக்கழக அவென்யூபகுதியில், நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இது திறந்து வைக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே பலரும் அங்கு வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
மிகவும் ஆர்வமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அங்கு வரிசைபிடித்து நின்றதாகவும், திங்கட்கிழமை காலை அளவில் அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு வரும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கும், அவர்களுக்கு அங்குள்ள பொருட்கள் குறித்து விளக்கமளிப்பதற்கும் சுமார் 20 முன்னிலைப் பணியாளர்கள் அங்கு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த அந்த விற்பனை நிலையத்தில் முதலாவதாக ஒரு கிராம் அளவிலான “white widow” எனப்படும் அந்த கஞ்சாவினைப் பெற்றுக் கொண்ட பெண் கருத்து வெளியிடுகையில்,
“தான் முதலாவதாக வீட்டுக்கு சென்று கோப்பி அருந்திவிட்டு அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லவுள்ளதாகவும், அலுவலத்திலிருந்து வீடு திரும்பியதும் இதனைப் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்ட